வியாழன், 25 ஜூன், 2009

ஒரு மாலைப் பொழுதின் பல சந்தர்பங்களில் உனக்காக நான் சேர்த்து வைத்தவை.

மீட்கப்படும் ஒவ்வொரு கணமும்
ஒடுங்கி அதிரும் குரல்
மீட்பின் குரூரத்தையே சொல்லிக்கொண்டிருக்கிறது
வெகு நாட்களுக்கு.

எழுதப்படும் ஒவ்வொரு வரிகளுக்கிடையிலும்
வாழ்வை தேடிச் சலிக்கும்
மனம்
மீண்டும் எழுதத் தொடங்குகிறது
வாழ்வின் வரிகளை.

சொல்லப்படும் ஒவ்வொரு ஆசுவாசமும்
சொல்பவனின் ஆசுவாசமாகவே மிஞ்சுகிறது
என்னால் பொருத்துக் கொள்ள முடியவில்லை
அதிலிருந்து நீளும்
வலியின் விரல்களை.

எடுக்கப்படும் ஒவ்வொறு உறுதிபாடும்
உறுதியாகவே இல்லை
உனது பொய்களைப் போல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக