உனக்கும் எனக்குமான இடைவெளியில்
நீளும் இந்த இருப்புப் பாதை
இணைந்து விடவும் கூடும்
அந்திக் கருக்கலை தாண்டி.
கருகி விட்ட பிரியம்
மீண்டும் முளைத்து விடும்
நீயும் நானும்
அறியாத ஒரு கணத்தில்.
ஆதலால்
சலனமற்று கிடக்கும்
இந்த புகைப்படங்களை
நான் வைத்துக்கொள்கிறேன்.
எப்போதும் நீயெனக்கு கொண்டுவரும்
ரோஜா செடிகளை
நீயே வைத்துக்கொள்.
சனி, 27 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக